திருப்பூர் : ரயில்வே விபத்துகளைக் குறைப்பது மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
திருப்பூர் : ரயில்வே விபத்துகளைக் குறைப்பது மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மொபைல் செயலியைப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ,"கடந்த ஆண்டு ரயில் விபத்துக்களில் 2572 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 600 பேரின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதே போல் ரயில் நிலையங்களில் 2242 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துக்களை தவிர்த்திடவே ரயில்வே காவல்துறையால் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் அனைவரும் அந்த செயலியைப் பயன்படுத்தி ஆபத்து நேரத்தில் தகவல் அளிக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மொபைல் செயலியைப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ,"கடந்த ஆண்டு ரயில் விபத்துக்களில் 2572 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 600 பேரின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதே போல் ரயில் நிலையங்களில் 2242 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துக்களை தவிர்த்திடவே ரயில்வே காவல்துறையால் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் அனைவரும் அந்த செயலியைப் பயன்படுத்தி ஆபத்து நேரத்தில் தகவல் அளிக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.