திருப்பூர் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு வாகன ஓட்டிகள் ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என திருநங்கைகள் நடித்துக் காட்டினர்.
திருப்பூர் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு வாகன ஓட்டிகள் ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என திருநங்கைகள் நடித்துக் காட்டினர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் சாலை முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, திருநங்கைகள் ஒன்றிணைந்து வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும், அதே போல் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினர். இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் மனோகரன், மாநகர துணை காவல் ஆணையர் உமா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், திருநங்கைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட திருநங்கைகள், பாதுகாப்பான பயணம் குறித்து நடனம் மற்றும் பாடல் மூலம் நடித்து காட்டியது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.