நீலகிரி : உதகை அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி : உதகை அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், உதகை மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. கூடலூர், பந்தலூர், உதகை, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் சில இடங்களில் காபி பயிரிடப்படுகிறது. காபியை பொறுத்தவரை அறுவடை காலம் அதிகம் என்பதால், இதனை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், சிலர் விற்பனைக்காகவும் பயிரிடுகின்றனர். காபி மகசூல் அதிகரித்தால், அதிக லாபம் கிடைக்கும். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி மற்றும் காபி தோட்டங்கள் பசுமையாக மாறின. மேலும், உதகை அருகேயுள்ள எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளது.

மேலும், சிலர் தேயிலை பயிர்களுக்கு நடுவே ஊடுபயிராக காபி பயிரிட்டுள்ள நிலையில், தேயிலை மற்றும் காபி மகசூல் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உதகை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் முழுவதும் காபி விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. காபி கிலோ ஒன்று ரூ.150 முதல் ரூ. 200 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், உதகை மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. கூடலூர், பந்தலூர், உதகை, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் சில இடங்களில் காபி பயிரிடப்படுகிறது. காபியை பொறுத்தவரை அறுவடை காலம் அதிகம் என்பதால், இதனை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், சிலர் விற்பனைக்காகவும் பயிரிடுகின்றனர். காபி மகசூல் அதிகரித்தால், அதிக லாபம் கிடைக்கும். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி மற்றும் காபி தோட்டங்கள் பசுமையாக மாறின. மேலும், உதகை அருகேயுள்ள எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளது.

மேலும், சிலர் தேயிலை பயிர்களுக்கு நடுவே ஊடுபயிராக காபி பயிரிட்டுள்ள நிலையில், தேயிலை மற்றும் காபி மகசூல் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உதகை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் முழுவதும் காபி விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. காபி கிலோ ஒன்று ரூ.150 முதல் ரூ. 200 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.