சிங்காநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மற்றும் கொடிக்கம்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

கோவை : சிங்காநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி மற்றும் கொடி கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சிங்காநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி மற்றும் கொடி கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை வரதராஜபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. இதன் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழக அறிவிப்பு பெயர் பலகை உள்ளது. நேற்று இரவு மர்மநபர்கள் சிலர், இந்தக் கொடி கம்பத்தை கீழே சாய்த்து, அதிலிருந்த கட்சியின் கொடியை எடுத்து எரித்துள்ளனர். மேலும், அருகே இருந்த ரத்த தான கழகத்தின் பெயர் பலகையையும் கீழே சாய்த்துள்ளனர். 



அதேபோல், சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான கொடிக்கம்பத்தை கீழே சாய்க்கப்பட்டு, அதிலிருந்த கட்சி கொடியும் எரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்துள்ளது. எனவே, இதனை ஒரே நபர்கள்தான் செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.



இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். மேலும், நிகழ்விடத்திற்கு வந்த பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் போலீஸார், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சபரிமலை விவகாரத்தின் எதிரொலியாக கம்யூனிஸ்டுகளின் கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...