நீலகிரி : கோத்தகிரியில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்
நீலகிரி : கோத்தகிரியில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்
கோத்தகிரி பஜார் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ. நாகராஜ் மற்றும் போலீசார், பேருந்து நிலையம், ராம்சந்த் ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சிலர் ஒரு துண்டு சீட்டில் ஏதோ எழுதி செல்வதைப் பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி வாங்கியது தெரிந்தது.
இதைதொடர்ந்து, ரகசியமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த கோத்தகிரியைச் சேர்ந்த ராஜ்குமார் (50), அப்துல் ஜாபர் (54) ரங்கராஜ் (66), மோகன்தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 1,64,000-ஐ மற்றும் 6 செல்போன்களை கைப்பற்றினர். பின்னர், அவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி பஜார் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ. நாகராஜ் மற்றும் போலீசார், பேருந்து நிலையம், ராம்சந்த் ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சிலர் ஒரு துண்டு சீட்டில் ஏதோ எழுதி செல்வதைப் பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி வாங்கியது தெரிந்தது.
இதைதொடர்ந்து, ரகசியமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த கோத்தகிரியைச் சேர்ந்த ராஜ்குமார் (50), அப்துல் ஜாபர் (54) ரங்கராஜ் (66), மோகன்தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 1,64,000-ஐ மற்றும் 6 செல்போன்களை கைப்பற்றினர். பின்னர், அவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.