கோவையில் அடுத்தடுத்த கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை

கோவை : ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கடைகளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்துள்ள கடைகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கடைகளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்துள்ள கடைகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே, தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கொலை, கொள்ளைக் குற்ற சம்பவங்களும் அடங்கும். இதனால் இந்த பகுதியில் கவல்துறை வாகனத்தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை பாலத்திற்கு அடியில் உள்ள 8 -க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அந்த பகுதியில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் கடையிலிருந்து ரூ.4 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 

இதே போலவே, இருசக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து ரூ.5 ஆயிரம், பெட்டிக் கடை ஒன்றை உடைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு கடையில் ரூ.3 ஆயிரம் என கொள்ளையடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபானக் கடையில் இரண்டு பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து, இன்று காலை அவ்வழியே சென்ற சிலர் அடுத்தடுத்து கடைகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஒருநாளில் நடந்த இந்தத் தொடர் கொள்ளைத் தொடர்பாக சிங்காநல்லூர் குற்றபிரிவு போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...