கோவையில் டீசல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

கோவை : கோவை மாவட்டம் நவ இந்தியா அருகே அதிவேகமாக வந்த டீசல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலே பலியானார்.

கோவை : கோவை மாவட்டம் நவ இந்தியா அருகே அதிவேகமாக வந்த டீசல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலே பலியானார்.

கோவை, சித்தாபுதூரை சேர்ந்தவர் சந்தோஷ் (44), நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலையில் அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா அருகேயிருந்து லட்சுமிமில்லுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது Tn 33 AM 7556 என்ற எண் கொண்ட டீசல் டேங்கர் லாரி, சந்தோஷ் மீது மோதியது. 



இதையடுத்து, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரம் சந்தோஷின் தலையில் ஏறியது. இதனால் சந்தோஷ் அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கியது. மேலும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அவினாசி சாலையில் பேருந்துகளும் லாரிகளும் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...