திருப்பூரில் காணாமல் போன 2 ஐம்பொன் சிலைகள் கருத்தம்பட்டி அருகே கண்டெடுப்பு

கோவை : திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு ஐம்பொன் சிலைகள், கருமத்தம்பட்டி அருகில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

கோவை : திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு ஐம்பொன் சிலைகள், கருமத்தம்பட்டி அருகில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். 

கருமத்தம்பட்டி அருகே உள்ள சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள காட்டுப் பகுதியில் 2 ஐம்பொன் சுவாமி சிலைகள் மர்மமாக கிடந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சாலையோரத்தில் பாழடைந்து கிடந்த வீட்டின் அருகே இருந்த 2 ஐம்பொன் சிலைகளை மீட்டனர். 



பின்னர் அருகே உள்ள காவல்நிலையங்கள் மூலம் சிலைகள் காணாமல் போன புகார் கொடுத்தவர்களை வரவழைத்தனர். இதையறிந்து, சுற்றுவட்டாரங்களில் இருந்து பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் என பலர் கருமத்தம்பட்டி காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பலகட்ட விசாரணையில், இந்த சிலைகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த மாதம் திருடப்பட்ட சிலைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இரு சிலைகளும் இரண்டு அடி உயரமுள்ள வேணுகோபாலசாமி மற்றும் சத்தியபாமா சிலை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, மங்கலம் போலீசார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...