உதகையில் உறைபனி : கடும் குளிரில் நடுநடுங்கும் மக்கள்

நீலகிரி : காலநிலை மாற்றத்தால் பொழிந்த கடும்பனியால், தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

நீலகிரி : காலநிலை மாற்றத்தால் பொழிந்த கடும்பனியால், தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. 



நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும்பனி நிலவியது. இதன் காரணமாக தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. புறநகர் பகுதிகளான பட் பயர், இந்து நகர், தலைக் குந்தா, பாலாடா, சோலூர், தும்மனாடா உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பனிப் பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. 



மேலும், அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், புறநகர் பகுதிகளான இந்து நகர், பட் பயர், தலைக் குந்தா பகுதிகளில் இதைவிடக் குறைவாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் பனி பொழிவு காரணமாக காலை மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...