பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மர கருப்பட்டி விலை உயர்வு : தயாரிப்பு பணிகள் தீவிரம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மர கருப்பட்டி விலை உயர்ந்துள்ளதால், அதனைத் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.


கோவை : மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மர கருப்பட்டி விலை உயர்ந்துள்ளதால், அதனைத் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பெரும்பாலும் பனைமரங்களில் இருந்தே கருப்பட்டி தயாரித்து வந்தனர். இந்நிலையில், குறைந்து வரும் பனைமரங்களில் எண்ணிக்கையின் காரணமாக தென்னை மரத்தில் இருந்து கருப்பட்டி தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னை மரங்களைப் பயன்படுத்தி கருப்பட்டி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 



மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையத்தில், விவசாய தோட்டங்களில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் இருந்து தொழிலாளர்கள் கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தென்னை மரத்திலும் காலையில் இருந்து தொழிலாளர்கள் மரம் ஏறி பானையில் உள்ள பதனீரினை எடுத்து வருகின்றனர். 

அதன் பின்பு, பதனீரை ஒரு பெரிய கொப்பரையில் ஊற்றுகின்றனர். தொடர்ந்து சுமார் 8 மணி நேரம் வரையிலும், அதனை விறகு அடுப்பில் நன்றாகக் காய்ச்சி பதப்படுத்துகின்றனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் காய்ச்சிய பதனீரை ஆறவைத்து, அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அச்சுகளில் ஊற்றுகின்றனர். அந்த அச்சில் நன்கு பொருந்திய பின் அக்கருப்பட்டியை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். 

மேலும், கடந்த மாதம் வரை ஒரு கிலோ கருப்பட்டி ரூ.50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிலோ ரூ.110 வரை விற்பனையாவதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...