கோவை: புத்தாண்டு தினத்தன்று இரவில் அதிவேகமாகவோ அல்லது மது போதையிலோ வாகனத்தை ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: புத்தாண்டு தினத்தன்று இரவில் அதிவேகமாகவோ அல்லது மது போதையிலோ வாகனத்தை ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கோவை மக்கள் தயாராகி வருகின்றனர். பொதுவாகப் புத்தாண்டன்று இரவு நேரத்தில் பெரும்படையாக திரளும் இளைஞர்கள் மது போதையில், அதிக வேகத்துடன் வாகனத்தை இயக்குவதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழலில், இந்த புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடும் விதமாகக் கோவை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், "இன்று இரவு புத்தாண்டு கொண்டாடும் விதமாக, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் அதி வேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும், குடி போதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மேம்பாலங்கள் மீது பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சுமித் சரண் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் வரும் இளைஞர்களைப் பிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறி, போதை தெளிந்த பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக காவல்துறையுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவானது கடந்த ஆண்டில் பெரியய்யா காவல் ஆணையராக இருந்த போது வெளியானது. தற்போது அவர் மேற்குமண்டல ஐ.ஜி. -ஆக பணியாற்றி வருகிறார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கோவை மக்கள் தயாராகி வருகின்றனர். பொதுவாகப் புத்தாண்டன்று இரவு நேரத்தில் பெரும்படையாக திரளும் இளைஞர்கள் மது போதையில், அதிக வேகத்துடன் வாகனத்தை இயக்குவதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழலில், இந்த புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடும் விதமாகக் கோவை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், "இன்று இரவு புத்தாண்டு கொண்டாடும் விதமாக, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் அதி வேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும், குடி போதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மேம்பாலங்கள் மீது பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சுமித் சரண் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் வரும் இளைஞர்களைப் பிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறி, போதை தெளிந்த பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக காவல்துறையுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவானது கடந்த ஆண்டில் பெரியய்யா காவல் ஆணையராக இருந்த போது வெளியானது. தற்போது அவர் மேற்குமண்டல ஐ.ஜி. -ஆக பணியாற்றி வருகிறார்.