ஒரு ரூபாய்க்கு 1 கிலோ சின்ன வெங்காயம் எனக் கூவி விற்று கோவை விவசாயிகள் நூதன போராட்டம்

கோவை : சின்ன வெங்காயத்தின் சிலை வீழ்ச்சியால் பாதிப்படைந்த விவசாயிகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வாங்கினால் இன்னொரு கிலோ இலவசம் எனக் கூவி விற்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : சின்ன வெங்காயத்தின் சிலை வீழ்ச்சியால் பாதிப்படைந்த விவசாயிகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வாங்கினால் இன்னொரு கிலோ இலவசம் எனக் கூவி விற்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சின்ன வெங்காய விலை வீழ்ச்சியின் காரணமாக, விவசாயிகள் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் சுமார் 2000 விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் குறைந்து உள்ளதால், தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, சின்ன வெங்காயத்தை ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும், ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என்றும் கூறியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். 

இது குறித்து விவசாயிகள் கூறும் போது வெங்காயத்தைச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டால் யாருக்கும் பலனில்லாமல் போகும் என்பதால், விளைவித்த வெங்காயத்தை பொதுமக்கள் பயன்படுத்தட்டும் என்ற நோக்கில் விற்பனை செய்தோம் என்றனர். 

இதனிடையே, விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...