கோவை : கருணை கொலை செய்து உடலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கக்கோரி நிலத்தைப் பறிகொடுத்த முதியவர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.
கோவை : கருணை கொலை செய்து உடலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கக்கோரி நிலத்தைப் பறிகொடுத்த முதியவர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (76). இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பாட்டி கருப்பாத்தாளுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை அவரது பேரன் கந்தசாமிக்கு கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இந்த மூன்று ஏக்கர் நிலத்தை, தி.மு.க.வைச் சேர்ந்த சன் ராஜேந்திரன் மற்றும் மேட்டுப்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டதாகக் கூறினார்.
தற்போது, அந்த நிலம் பலரிடம் கைமாறி வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த நிலத்தை மீட்க முதலமைச்சர் முதல் அனைத்து அதிகாரிளிடமும் புகாரளித்து போராடி வருவதாகக் கூறினார். ஆனால், அரசியல் பின்பலத்தால் தனது மனுவைப் பெற அதிகாரிகள் மறுப்பதால், தன்னை கருணை கொலை செய்து உடலை, மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு வழங்கிட வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.