நீலகிரி: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பெண் வன்கொடுமை குறைவாக இருப்பதாக தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
நீலகிரி: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பெண் வன்கொடுமை குறைவாக இருப்பதாக தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
உதகையில், சமூக நலத்துறை சார்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். தமிழக மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 1,000 பெண்களுக்கு 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பெண்கள் வன்கொடுமை மிகவும் குறைவாகவே உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமை புகார்கள் மிகவும் குறைவாக உள்ளது. பெற்றோர்களின் சொத்துக்களை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்கள் பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்காமல் விட்டு விடுவதை தடுக்கும் விதமாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெற்றோர்களின் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," எனக் கூறினார்.