பிளாஸ்டிக் தடையால் தள்ளாடும் கோவை டாஸ்மாக் பார்கள் : மாற்றுப்பொருட்கள் குறித்து ஆலோசனை

கோவை : தமிழக அரசு பிளாஸ்டிக் தடை அறிவித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் பார்களில் மாற்றுப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை : தமிழக அரசு பிளாஸ்டிக் தடை அறிவித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் பார்களில் மாற்றுப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதனைப் பலரும் வரவேற்றாலும் சிலருக்கு இதனால் பாதிப்புகள் அதிகம். மாற்றுப் பொருட்களின் அதிகப்படியான விலை மற்றும் மாற்றுப் பொருட்கள் தட்டுப்பாடு ஆகிய காரணங்களுக்காக அதனைத் தவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த தடையால் டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட்டுகளும், பிளாஸ்டிக் டம்பளர்களும் இனி உபயோகப்படுத்த முடியாது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன மாற்று வழங்குவது என குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட பார் உரிமையாளர்கள் சங்கம் துணைத்தலைவர் லூயிஸ் கூறுகையில், "இந்த தடை வரவேற்கத்தக்கது தான். ஆனாலும், இதனால் எங்கள் தொழிலில் மேலும் பல பிரச்சினைகள் வரும் வாய்ப்புள்ளது. இதனால் தண்ணீர் பாக்கெட்களுக்கு பதிலாக 300 மி.லி தண்ணீர் பாட்டில்கள், மற்றும் பிளாஸ்டிக் அல்லது பேப்பர் கப்புகளுக்குப் பதில் கண்ணாடி டம்பளர்கள் தரலாம் என யோசித்துள்ளோம். 

எனினும், கண்ணாடி டம்பளர்கள் வழங்கப்பட்டால் அது உடைந்து விடும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் சிலர் எடுத்தும் செல்லக் கூடும். எனவே, இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, " என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...