கோவை : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணம்பட்டியைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர் பொன்னம்பலம், மூளைச்சாவடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் நால்வருக்குத் தானமாக அளிக்கப்பட்டது.
கோவை : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணம்பட்டியைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர் பொன்னம்பலம், மூளைச்சாவடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் நால்வருக்குத் தானமாக அளிக்கப்பட்டது.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் என்.பொன்னம்பலம் (40). இவருக்குச் சொந்த ஊர் ஈரோடு. கோவையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலை, கடுமையான தலைவலி மற்றும் வயிற்று வலி காரணமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, பல்நோக்கு மருத்துவமனையின் தலைமை நரம்பியல் நிபுணரான மருத்துவர்.கே.அசோகன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அவருக்குத் தீவிரசிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தென்படவில்லை. இந்நிலையில், புதன்கிழமை 6 மணி நேர இடைவெளியில், இருமுறை முழுமையாகப் பொன்னம்பலம் பரிசோதிக்கப்பட்டார். அதில், அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சோகமான தருணத்திலும், பொன்னம்பலத்தின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். எனவே, தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொன்னம்பலத்தின் ஒரு கிட்னி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு கிட்னி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
மேலும், அவரது இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு வாழ்வளித்ததுள்ளது. கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. உடல் உறுப்புதானத்தின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்ட பொன்னம்பலத்தின் குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகம் பெரிதும் பாராட்டியது.
இதற்கிடையில், உலகிலேயே 8 மணிநேரத்திற்குள் அதிகளவிலான உடல் உறுப்புக் கொடையாளிகளைப் பதிவு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் என்.பொன்னம்பலம் (40). இவருக்குச் சொந்த ஊர் ஈரோடு. கோவையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலை, கடுமையான தலைவலி மற்றும் வயிற்று வலி காரணமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, பல்நோக்கு மருத்துவமனையின் தலைமை நரம்பியல் நிபுணரான மருத்துவர்.கே.அசோகன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அவருக்குத் தீவிரசிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தென்படவில்லை. இந்நிலையில், புதன்கிழமை 6 மணி நேர இடைவெளியில், இருமுறை முழுமையாகப் பொன்னம்பலம் பரிசோதிக்கப்பட்டார். அதில், அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சோகமான தருணத்திலும், பொன்னம்பலத்தின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். எனவே, தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொன்னம்பலத்தின் ஒரு கிட்னி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு கிட்னி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
மேலும், அவரது இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு வாழ்வளித்ததுள்ளது. கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. உடல் உறுப்புதானத்தின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்ட பொன்னம்பலத்தின் குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகம் பெரிதும் பாராட்டியது.
இதற்கிடையில், உலகிலேயே 8 மணிநேரத்திற்குள் அதிகளவிலான உடல் உறுப்புக் கொடையாளிகளைப் பதிவு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.