திருப்பூர் : விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணக்கோரி அனைத்துக்கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் : விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணக்கோரி அனைத்துக்கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்லப்படும் மின் கோபுரங்களுக்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் ஓரங்களில் புதைவழித்தடமாக கேபிள் லைன் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் தொடர்ந்து 11 நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என கடந்த 5 தினங்களாக 18 விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், உடல்நிலை மோசமடைந்து 3 விவசாயிகள் நேற்றைய தினம் மயக்கமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்லப்படும் மின் கோபுரங்களுக்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் ஓரங்களில் புதைவழித்தடமாக கேபிள் லைன் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் தொடர்ந்து 11 நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என கடந்த 5 தினங்களாக 18 விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், உடல்நிலை மோசமடைந்து 3 விவசாயிகள் நேற்றைய தினம் மயக்கமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.