திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த குடியிருப்பு பகுதிகளை தேர்வு செய்யக்கூடாது : எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மனு

கோவை : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு குடியிருப்பு பகுதிகளை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியும் தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

கோவை : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு குடியிருப்பு பகுதிகளை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியும் தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளி மைதானங்களில் குப்பைகளை கொட்டி, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதி மக்களும் தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சியிடம் மனுக்களையும் அளித்துள்ளனர்.



இந்த சூழலில், குடியிருப்பு பகுதிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல், மாற்று இடங்களில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஏற்கனவே, குப்பைகளை வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வாங்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. இந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஒதுக்குப்புறமான இடங்களைத் தேர்வு செய்து அங்கு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்," என்றார்.



திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாற்று இடங்களை தி.மு.க. பரிந்துரை செய்யுமா..? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "ரிசர்வ் சைட் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் மாநகராட்சியின் வசம் உள்ளது. மாற்று இடங்களை தேர்வு செய்வது மாநகராட்சி அதிகாரிகளின் பணி. நான் ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அதற்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தான் தெரிவிப்பார்கள்," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...