காட்டு யானை தாக்கி உயிரிழந்த வன ஊழியர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

கோவை : கோவையில் காட்டு யானை விநாயகன் தாக்கியதில் உயிரிழந்த வன ஊழியர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் காட்டு யானை விநாயகன் தாக்கியதில் உயிரிழந்த வன ஊழியர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கோவையை அடுத்த தடாகம், சின்னதடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை விநாயகன் புகுந்தது. அப்போது, அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், துரிதமாக செயல்படும் வனக் குழுவினர் (ஆர்.ஆர்.டி.) அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

யானை புகுந்த சத்தம் கேட்டு துரிதமாக செயல்படும் வனக்குழு ஊழியரான தடாகத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28) மற்றும் ராமதாஸ், சூரிய பிரகாஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். அப்போது, திடீரென ஆவேசமடைந்த யானை விநாயகன் திரும்பி வந்து வெங்கடேசனை மிதித்து, தூக்கி வீசியது. இதில், அவரது தலை, கால், இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த ஆர்.ஆர்.டி. வீரர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, தலைமை வன பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு வார்டனுமான ரவி காந்த் உபாதத்யாய், வனஅதிகாரி வெங்கடேசனின் உயிரிழப்பிற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

எனவே, கூடுதலாக ரூ. 6 லட்சம் வெங்கடேசனின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே காட்டு யானை விநாயகன் பிடிக்கப்பட்டு, முதுமலையில் கொண்டு சென்று விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...