தொடர் விடுமுறைக் காரணமாக உதகை சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிப்பு

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.


நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் தற்போது சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலையாக 8 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகஅளவில் வர தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, உதகையில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பூங்கா, காட்டேரிப்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக தட்பவெப்பநிலையும் அதற்கு உகந்தாற் போல நிலவி வருகிறது. 



மேலும், தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...