கோவை : சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தலைமறைவான சகோதரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தலைமறைவான சகோதரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் ஒருவருக்கு, ஒரு மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் மகளும், டிப்ளமோ படிக்கும் மகனும் உள்ளனர். இந்த நிலையில், டிப்ளமோ படிக்கும் கார் ஓட்டுநரின் மகன், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது சகோதரிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி உள்ளார். இதனால், மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாக தெரிகிறது.
இத்தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிய வந்ததையடுத்து, மாணவியிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால், மாணவி தனது கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் பற்றி கூற மறுத்துவிட்டார். அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில், அவரது சகோதரர் தான் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, செல்வபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரது சகோதரரை தேடி வருகின்றனர். சகோதரனே தனது சொந்த சகோதரியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் ஒருவருக்கு, ஒரு மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் மகளும், டிப்ளமோ படிக்கும் மகனும் உள்ளனர். இந்த நிலையில், டிப்ளமோ படிக்கும் கார் ஓட்டுநரின் மகன், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது சகோதரிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி உள்ளார். இதனால், மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாக தெரிகிறது.
இத்தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிய வந்ததையடுத்து, மாணவியிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால், மாணவி தனது கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் பற்றி கூற மறுத்துவிட்டார். அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில், அவரது சகோதரர் தான் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, செல்வபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரது சகோதரரை தேடி வருகின்றனர். சகோதரனே தனது சொந்த சகோதரியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.