தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.19 லட்சம் அபராதம் : நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோவை : விபத்தில் சிக்கிய காருக்கு உரிய இழப்பீடு வழங்காத தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ. 19 லட்சத்தை அபராதமாக விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : விபத்தில் சிக்கிய காருக்கு உரிய இழப்பீடு வழங்காத தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ. 19 லட்சத்தை அபராதமாக விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டை அடுத்த அங்கூர்ரோட்டை சேர்ந்த வினோதினி கடந்த 2015-ல் நாமக்கலில் உள்ள கார் விற்பனையகத்தில் ரூ. 15 லட்சத்துக்கு வோல்ஸ்வேகன் காரை புதிதாக வாங்கியுள்ளார். இதற்காக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கி வரும் எச்.டி.எப்.சி. காப்பீடு நிறுவனத்தில் வாகன காப்பீட்டு செய்திருந்தார்.

இந்த நிலையில், கார் வாங்கிய சில மாதங்களில் விபத்துக்குள்ளானதை அடுத்து, காப்பீட்டு தொகை கேட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அந்நிறுவனம் பல காரணங்களை சுட்டிக்காட்டி காப்பீட்டு பணத்தை தராமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அதிருப்தி அடைந்த

வினோதினி கடந்த 2015-ல் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் உரிய இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தார். 

இவ்வழக்கை விசாரித்து வந்த கோவை நுகர்வோர் ஆணைய தலைவர் பாலசந்திரன், உறுப்பினர் அமுதம் ஆகியோர் மனுதாரருக்கு காப்பீட்டு தொகையாக, 19 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 25 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன், வழக்கு செலவுக்கு ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ.19 லட்சத்து 62 ஆயிரத்து 610 வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...