தோடர் இன மக்களை தகாத வார்த்தைகளில் திட்டிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

நீலகிரி : உதகையில் நடைப்பெற்ற தோடர் இன மக்களின் கோயில் திருவிழாவின் போது, தகாத வார்த்தைகளால் திட்டிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் நடைப்பெற்ற தோடர் இன மக்களின் கோயில் திருவிழாவின் போது, தகாத வார்த்தைகளால் திட்டிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகையில் தோடர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பவானிஸ்வரர் திருக்கோயிலின் 107-ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஷோற்சவ பெருவிழா நேற்று நடைபெற்றது. உதகையின் முக்கிய வீதிகள் வழியாக பவானிஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது.



அப்போது, தோடர் மக்கள் தேரோட்டத்தின்போது காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் தோடர் இன மக்களை பேசியதாகக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.



இந்த நிலையில், தோடர் இன மக்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய உதகை மத்திய நகர காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தோடர் இன மக்களிடம் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கூறி இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தோடர் இன மக்கள் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...