கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவிக்கான புதிய கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவிக்கான புதிய கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை கட்டணம் ரூ. 155 எனவும், கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்தது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ. 500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும், கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை கட்டணம் ரூ. 155 எனவும், கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்தது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ. 500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும், கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.