கிராமிய நிகழ்ச்சிகள் மூலம் மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் கோவையில் தொடக்கம்

கோவை : மதுபானம் மற்றும் கள்ள சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.


கோவை : மதுபானம் மற்றும் கள்ள சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நான்கு வாரங்கள் இந்தக் கலை குழுவினர் தங்கி, தங்களது கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர். ஒரு அணிக்கு 5 நபர்கள் வீதம் 14 அணிகள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கட்டைகோல் ஆட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை இந்த கலை குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த உள்ளனர். இதன் தொடக்க விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 



இது குறித்து கலால் துறை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவ்வப்போது கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கையைச் சேர்ந்த கங்கை கருங்குயில் கலைக்குழுவைச் சேர்ந்த 14 அணிகள், தலா 5 பேர் வீதம் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை,

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்," இவ்வாறு தெரிவித்தனர்.

முன்னதாக, கலைகுழுவினரின் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கட்டைக்கால் ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...