கோவை : சிறுதுளி அமைப்பின் சார்பில் சுண்டாக்காமுத்தூர் அய்யன் குட்டையை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியது.
கோவை : சிறுதுளி அமைப்பின் சார்பில் சுண்டாக்காமுத்தூர் அய்யன் குட்டையை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியது.
அய்யன் குட்டை என அழைக்கப்படும் சுண்டக்காமுத்துார் குட்டையை சிறுதுளி தூர்வாரி சீரமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிக்கு ஜி.இ. ஆயில் அன்ட் கேஸ் கம்பெனி உதவி செய்கிறது. இந்த நிகழ்ச்சியை மாநில ஊரக நிர்வாக மற்றும் கிராம மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி துணை ஆணையர், நகர பொறியாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் சிறுதுளியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, பள்ளம் மேடுகள் சமப்படுத்தப்படும். தூய்மை செய்யப்பட்டு நீர் வழி போக்குவரத்து சீரமைக்கப்படும். மழை காலங்களில் இதில் தண்ணீர் சேகரிக்க வசதிகள் செய்யப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளன.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘பொதுநல அமைப்புகள் மேற்கொள்ளும் இத்தகைய பணிகளுக்கு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார்.
அய்யன் குட்டை என அழைக்கப்படும் சுண்டக்காமுத்துார் குட்டையை சிறுதுளி தூர்வாரி சீரமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிக்கு ஜி.இ. ஆயில் அன்ட் கேஸ் கம்பெனி உதவி செய்கிறது. இந்த நிகழ்ச்சியை மாநில ஊரக நிர்வாக மற்றும் கிராம மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி துணை ஆணையர், நகர பொறியாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் சிறுதுளியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, பள்ளம் மேடுகள் சமப்படுத்தப்படும். தூய்மை செய்யப்பட்டு நீர் வழி போக்குவரத்து சீரமைக்கப்படும். மழை காலங்களில் இதில் தண்ணீர் சேகரிக்க வசதிகள் செய்யப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளன.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘பொதுநல அமைப்புகள் மேற்கொள்ளும் இத்தகைய பணிகளுக்கு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார்.