கோவை : ஆனைகட்டி அருகே உள்ள வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : ஆனைகட்டி அருகே உள்ள வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஜம்புகண்டி சரக வனப்பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், மாங்கரை - ஆனைகட்டி நெடுஞ்சாலையின் ஓரத்தில் 50 மீட்டர் தொலைவிலும் மத்திமரப்பள்ளம் உள்ளது. இங்கு உடலில் காயங்களுடன் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக கால்நடை மேய்ப்பவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டனர். பின்னர், விலங்கின் உடற்கூறாய்வுக்கு சிறுத்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
