ரூ.426 கோடி செலவில் அன்னூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளை இணைத்து புதிய குடிநீர் திட்டம் : சபாநாயகர் பா. தனபால் அறிவிப்பு

கோவை : அன்னூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.426 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பா. தனபால் அறிவித்தார்.

கோவை : அன்னூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.426 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பா. தனபால் அறிவித்தார்.

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது பொகலூர் கிராமம். அந்த கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட அரசு நலத்திட்டப்பணிகளைச் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருமான பா. தனபால் தொடங்கி வைத்தார். 



இந்த நலத்திட்டப்பணிகளில், நான்கு இடங்களில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா, மற்றும் உடற்பயிற்சி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். மேலும், பணிக்கு செல்லும் மகளிருக்கான மானிய விலை அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 120 பெண்களுக்கு புதிய ஸ்கூட்டர் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக, 48 பேருக்கு முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்பட்டன. 



இதையடுத்து, சபாநாயகர் தனபால் பேசுகையில், "தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி அத்திகடவு -அவிநாசி நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரபட்டுள்ளது. அன்னூர் பகுதியில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பைபாஸ் திட்டத்திற்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது. 

மேலும், அன்னூர் மற்றும் அவிநாசி உள்ளிட்ட ஊரக பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.426 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் குக்கிராமங்கள் வரை சீரான குடிநீர் வசதி கிடைக்கும்," என்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...