நீலகிரி : அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.
நீலகிரி : அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், கழுகு போன்ற அரியவகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், வனதூய்மையாளன் என அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் மாயார் ஆற்றுப்படுகை மற்றும் தெங்குமரஹாடா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக இருந்தன.
காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அழிவின் பட்டியலில் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து, பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, பிணந்தின்னி கழுகுகளான கருங்கழுத்துபாறு கழுகு, வெண்முதுகுபாறு கழுகு, மஞ்சள் முகப்பாறு கழுகு, செம்முகப்பாறு கழுகு போன்றவை நீலகிரி மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்த நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பிணந்தின்னி கழுகுகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கழுகுகள் அழிவதற்கான காரணங்கள் என்ன என்பதை விளக்கி அளகம்டிட்டா அமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், கழுகு போன்ற அரியவகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், வனதூய்மையாளன் என அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் மாயார் ஆற்றுப்படுகை மற்றும் தெங்குமரஹாடா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக இருந்தன.
காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அழிவின் பட்டியலில் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து, பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, பிணந்தின்னி கழுகுகளான கருங்கழுத்துபாறு கழுகு, வெண்முதுகுபாறு கழுகு, மஞ்சள் முகப்பாறு கழுகு, செம்முகப்பாறு கழுகு போன்றவை நீலகிரி மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்த நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பிணந்தின்னி கழுகுகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கழுகுகள் அழிவதற்கான காரணங்கள் என்ன என்பதை விளக்கி அளகம்டிட்டா அமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.