நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அங்கீகாரம்

டெல்லி : இந்தியாவில் இருக்கும் அனைத்து கணினிகளில் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றப்படும் தகவல்களை சேகரிக்கவும் சி.பி.ஐ. உள்ளிட்ட 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

டெல்லி : இந்தியாவில் இருக்கும் அனைத்து கணினிகளில் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றப்படும் தகவல்களை சேகரிக்கவும் சி.பி.ஐ. உள்ளிட்ட 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. 



இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களைக் கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்துப் பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உளவுத்துறை, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய விசாரணைக் குழு, ரா பிரிவு, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த 10 அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபரின் கணினியில் இருக்கும் தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், அதனை கணினியின் உரிமையாளர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர் வழங்க வேண்டும். மீறி, அளிக்கத் தவறினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...