கோவை : விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
கோவை : விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 5 -வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 13 மாவட்டங்களில் 8 மையங்களில் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை மாவட்டம் செஞ்சேரிமலை, செஞ்சேரி பிரிவு, சுல்தான்பேட்டை மற்றும் திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

இது குறித்து ஏர்முனை இளைஞர் அணியைச் சார்ந்த சுரேஷ் கூறுகையில், "இந்த காத்திருப்புப் போராட்டமானது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக நடைபெற்று வருகிறது. எங்களது போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே, இன்று எங்களுக்கு ஆதரவு தெரிவித்து செஞ்சேரிமலை, செஞ்சேரி பிரிவு, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இதற்கு விவசாய சங்கத்தின் கூட்டியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி," என்றார்.