நீதிமன்ற உத்தரவை மீறிய ஆம்புலன்ஸ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓட்டுநர் மனு

நீலகிரி : நீதிமன்ற உத்தரவை மதிக்காத 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மனு அளித்தார்.

நீலகிரி : நீதிமன்ற உத்தரவை மதிக்காத 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மனு அளித்தார்.

நீலகிரியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். கோவையில் கடந்த 2010 -ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015 -ம் ஆண்டு ஆம்புலன்ஸ் நிர்வாகம் தன் மீது பொய்யான புகார் கூறி, வேலையை விட்டு நீக்கி விட்டதாகத் தொழிலாளர் நலத்துறையை அணுகி புகார் அளித்து உள்ளார். 

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் பிரவீன் குமாரின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து அவரைப் பணியில் மீண்டும் அமர்த்த தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், 108 நிர்வாகம் அவருக்குப் பணி வழங்கவில்லை. மீண்டும் பணியில் அமர்த்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகக் கூறி இழுத்தடிப்பு செய்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிரவீன் குமார் உயர்நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி தொழிலாளர் நலத்துறை அளித்த உத்தரவு நகலே போதுமானது. அதன் அடிப்படையிலே பணி நீக்கத்தை ரத்து செய்து பணியில் அமர்த்தலாம் என தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, பிரவீன்குமார் நேற்று முன் தினம் மீண்டும் பணிக்கு சென்று ஆம்புலன்ஸை எடுத்துள்ளார். அப்போது 108 நிர்வாகம், அவரை ஆம்புலன்ஸ் ஓட்ட அனுமதிக்க முடியாது என மிரட்டியதாகக் கூறும் பிரவீன்குமார், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "என் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக என் மனைவி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தையும், என் வழக்குக்கு தேவையான உதவியையும் செய்து வந்தார். தொழிலாளர் நலத்துறை, நீதிமன்றமும் உத்தரவிட்டும் பின்னும் அதனை மதிக்காமல் வேண்டுமென்றே பழிவாங்கும் உணர்ச்சியில் 108 நிர்வாகம் செயல்படுகிறது. என்னை மீண்டும் பணியில் அமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார். 

மேலும், விரைவில் தன்னுடைய பணி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...