நீலகிரி : குன்னுாரில் முள் கம்பி வேலியில் சிக்கித் தவித்த சிறுத்தை வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : குன்னுாரில் முள் கம்பி வேலியில் சிக்கித் தவித்த சிறுத்தை வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று குன்னுார் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் 3 வயதுள்ள சிறுத்தை ஒன்று தனியார் குடியிருப்பு அருகில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டனர்.
இது குறித்து வன அதிகாரிகள் கூறும்போது :- கடந்த 12-ம் தேதி முள் கம்பியில் சிறுத்தையின் கால் சிக்கியபடி, வேலியின் மேற்புறத்தில் சிமெண்ட் கம்பத்தில் நின்று தவித்துக் கொண்டிருந்தது. இதையறிந்து பொதுமக்கள் கூடியதால் சுமார் ஒரு மணிநேரம் தவித்த சிறுத்தை கம்பியை பிய்த்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. இதைத் தொடர்ந்து, உடல் கிழிந்த நிலையில் வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. உடல் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த சிறுத்தையை, கரடி அல்லது வேறு விலங்குகள் தாக்கியதால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர்கள் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று குன்னுார் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் 3 வயதுள்ள சிறுத்தை ஒன்று தனியார் குடியிருப்பு அருகில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டனர்.
இது குறித்து வன அதிகாரிகள் கூறும்போது :- கடந்த 12-ம் தேதி முள் கம்பியில் சிறுத்தையின் கால் சிக்கியபடி, வேலியின் மேற்புறத்தில் சிமெண்ட் கம்பத்தில் நின்று தவித்துக் கொண்டிருந்தது. இதையறிந்து பொதுமக்கள் கூடியதால் சுமார் ஒரு மணிநேரம் தவித்த சிறுத்தை கம்பியை பிய்த்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. இதைத் தொடர்ந்து, உடல் கிழிந்த நிலையில் வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. உடல் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த சிறுத்தையை, கரடி அல்லது வேறு விலங்குகள் தாக்கியதால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர்கள் கூறினார்.