கோவை: கோவையில் பகல் நேரத்தில் கணவன்-மனைவி போல வீடுகளுக்குச் சென்று, பூட்டிய வீட்டில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் பகல் நேரத்தில் கணவன்-மனைவி போல வீடுகளுக்குச் சென்று, பூட்டிய வீட்டில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் தனிப்படை போலீசார் அன்னூர்-அவினாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிட்டமான வகையில் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அந்த காரில் ஒரு பெண்ணும், ஆணும் இருந்தனர்.
அவர்களை விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்றும், உடன் இருந்த பெண் அதே பகுதியை சேர்ந்த அவரது கள்ளக் காதலி சுகன்யா என்பதும் தெரியவந்தது.
மேலும், கோவையில் பகல் நேரங்களில் கணவன்-மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடம், அன்னூர் பகுதியில் திருடப்பட்ட 25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் தனிப்படை போலீசார் அன்னூர்-அவினாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிட்டமான வகையில் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அந்த காரில் ஒரு பெண்ணும், ஆணும் இருந்தனர்.
அவர்களை விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்றும், உடன் இருந்த பெண் அதே பகுதியை சேர்ந்த அவரது கள்ளக் காதலி சுகன்யா என்பதும் தெரியவந்தது.
மேலும், கோவையில் பகல் நேரங்களில் கணவன்-மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடம், அன்னூர் பகுதியில் திருடப்பட்ட 25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.