மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ சுகுமார், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கோவை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார், தனது புதுப்பிக்கப்பட்ட தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்து மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத குருமார்களை அழைத்து ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்களிடம் ஆசி பெற்று தனது அலுவலக பணிகளைத் தொடங்கினார்.

இந்நிகழ்வில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் ஒருவர் தவறவிட்ட மூன்று பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்து நேர்மை

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...