மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ சுகுமார், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கோவை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார், தனது புதுப்பிக்கப்பட்ட தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்து மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத குருமார்களை அழைத்து ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்களிடம் ஆசி பெற்று தனது அலுவலக பணிகளைத் தொடங்கினார்.

இந்நிகழ்வில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் ஒருவர் தவறவிட்ட மூன்று பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்து நேர்மை

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...