கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்கி நகர், கோபால் நகர், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தூய்மை, சாக்கடை பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டன.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரடியாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.



கல்கி நகர் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.




அவிநாசி பிரதான சாலையில் ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி நகர் முதல் மணல் பாலம் வரையிலான பகுதிகளில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் மண்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்தார். சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




கோபால் நகர் பகுதியில் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.




ஜெகநாதபுரம் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பல்வேறு குடிமைச் சேவைகள் குறித்து விசாரித்தார். தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...