கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்கி நகர், கோபால் நகர், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தூய்மை, சாக்கடை பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டன.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரடியாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.



கல்கி நகர் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.




அவிநாசி பிரதான சாலையில் ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி நகர் முதல் மணல் பாலம் வரையிலான பகுதிகளில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் மண்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்தார். சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




கோபால் நகர் பகுதியில் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.




ஜெகநாதபுரம் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பல்வேறு குடிமைச் சேவைகள் குறித்து விசாரித்தார். தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...