50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்'

கோவை: கோவையில் உள்ள உணவகங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பு.

கோவை: கோவையில் உள்ள உணவகங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பு.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக இந்த சேவையை செய்வதாக கூறுகிறார், 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர்.அஷ்வின் நித்திஷ். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த திட்டத்திற்கு 'பசுமை காசி' என்று பெயர் சூட்டியுள்ளோம். மரங்கள் கார்பன் டை ஆக்சைடின் வங்கிகள் ஆகும்.

மரங்களை எரிக்கும் போது கார்பன் உமிழ்வுகள் அதிகமாகும். எனவே, மரங்களுக்கு பதிலாக தேங்காய் தொட்டிகளை நாங்கள் அனுப்புகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தேங்காய் தொட்டிகள், காசியில் உள்ள மணிகர்ணிகை காடுகளில், சடலங்களை எரிக்க பயன்படுகிறது. 

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2000 டன் தேங்காய் தொட்டிகளை அனுப்ப நாங்கள் முயற்சி செய்கிறோம். இளைஞர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். அடுத்த கட்டமாக, அரசுப் பள்ளி குழந்தைகள் மூலம் தேங்காய் தொட்டிகளை சேகரிக்க முயற்சிப்போம்." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...