தொடர்மழையால் கூடலூர் சாலையில் விழுந்த மரங்கள் : வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்திய நிகழ்வு

நீலகிரி : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரி : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த மழையினால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்களும் சாலைகளில்  விழுந்து விபத்து ஏற்படுகிறது. 

இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள ஆமைகுளம் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  அங்கு பெய்த தொடர் மழையால் சாலையில் சில மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அப்புறப்படுத்த மீட்புக் குழுவினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள் அதிகாரிகளின் உதவியை எதிர்பாராமல், அவர்களே சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மழைகாலங்களில் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து வரும் நிலையில், மீட்புக் குழுவினரின் இந்த அலட்சிய நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...