திருப்பூரில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் : 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 



அரண்மனை புதூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகராட்சியில் பிற பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருப்பூர் தெற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மொத்த விலை கடையில் (அஞ்சனா ஸ்டோர்ஸ்) பெட்டிகளைக் கொண்டு செல்லப்படுவது குறித்து சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்களை போலிசார் கண்டுபிடித்தனர். 



இதனையடுத்து, அந்தக் கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், டெல்லியில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வரவழைத்து திருப்பூர் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த முருகேசன் என்பவரையும் கைது செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக லட்சுமணன், பாபு ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...