கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் : பொதுமக்கள் சாலைமறியல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி பகுதி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதன் காரணமாக தினம்தோறும் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு வரும் யானைகள் சாலையில் நடப்பது அன்றாட நிகழ்வாகும். 



இந்த நிலையில், வழக்கம் போல நேற்று இரவு ஊருக்குள் நுழைந்த யானைகள் இன்று காலை 7 மணியளவில் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பின. 

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மதரசா பள்ளிக்குச் சென்று திரும்பியுள்ளனர். அவர்கள் எதிரே யானை வருவதைக் கண்டு ஓடியுள்ளனர். அதில், மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காட்டு யானை கீழே கிடந்த குழந்தைகள் அருகே வந்த நிலையில், அப்பகுதி மக்கள் யானையை விரட்டியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே, விரைவில் காட்டு யானை ஊருக்குள் நுழைவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக தமிழக – கர்நாடகா இடையே சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...