மழைநீர் வடிகாலை திருத்தி அமைக்கக் கோரி சி.பி.ஐ., (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி சார்பில் மனு

கோவை: 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.

முத்தண்ணன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சென்ற வருடம் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. சாலை மட்டத்தின் அளவை விட உயரமாகவும், குடியிருப்புகளை விட உயரமாகவும் இந்த வடிகால் வாரிய கட்டுமானப் பணிகள் கட்டப்பட்டுள்ளதால், மழைநாட்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக புகாரளித்து வந்தனர். இதேபோல, தற்போது தடாகம் சாலையிலும், மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில், 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரியும், தடாகம் சாலையில் இதேபோல் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலை உடனே திருத்தி அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.



இதுகுறித்து 21-ம் வார்டு முன்னாள் கவுன்சிலர் மற்றும் சி.பி.ஐ., (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) கட்சியின் மாநகர செயலாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "சாலை மற்றும் குடியிருப்புகளின் மட்டத்தைவிட உயரமாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் முதியோர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பருவமழை தொடங்கியுள்ளதால் குடியிருப்பு பகுதியில் நீர்தேங்கி டெங்கு நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரிசெய்ய வேண்டியும், இதேபோல, தடாகம் சாலையில் கட்டப்பட்டு வரும் வடிகாலை திருத்தி அமைக்க வேண்டியும் துணை ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்" என்றார்.

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு:




பாதாளத்தில் வீடு; பரிதவிக்கும் எளிய மக்கள் - கிளிக் செய்யவும்

Newsletter

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...