கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் கனமழையால் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(17.07.2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் கனமழையால் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(17.07.2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். இதேப்போன்று, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். இதேப்போன்று, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.