ரயில் பயணி தவறவிட்ட உடைமைகளை மீட்டுக் கொடுத்த டிக்கெட் பரிசோதகர்

கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சேலம் கோட்டத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் ரயில் எண். 12690 நாகர்கோவில்- சென்னை வழித்தடத்தினை ரயில் சேலம் வந்த போது அதில் சோதனை செய்தார்.

அப்போது, அந்த ரயிலில் பான்கார்டு மற்றும் ரூ.4442 பணத்துடன் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது. அந்த பையை நாகேஷ்வரி என்ற பயணி தவறவிட்டுச் சென்றதும், அவர் திருச்சியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கைப்பையை மீட்ட டிக்கெட் பரிசோதகர் மணிகண்டன் அதனை உரியவரிடம் ஒப்படைக்க கூறி, ரயில்வே நிர்வாகத்திடம் (GRP) கொடுத்தார். அவரது இந்த பணியினை சேலம் கோட்ட ரயில்வே பாராட்டுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...