மக்கள் நீதி மையம் கோவை மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகம்

கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இது குறித்து பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, "கோவை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவுக்கு மாவட்ட நிர்வாகியாக டி.பிரபு என்பவரும், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு தம்புராஜ் (எ) எம்.பரமேஸ்வரன் என்பவரும், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் தொகுதிக்கு தாமரை கண்ணனும், பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு செந்தாமரை கண்ணனும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும், கோவை மாவட்ட கட்சி தலைமை அலுவலகமாக பெரியகடை வீதி சான்மா இண்டர்நேஷனல் விடுதி கீழ் தளத்தில் தொடங்கப்பட்டு இன்று கட்சி கொடி ஏற்றப்பட்டது. அடுத்து சில தினங்களில் புதிய பட்டியலை தலைமை வெளியிடும்." என்றார். 

இந்நிகழ்வில் கவிஞர் புவியரசு, மருத்துவர்கள் கணேசன், டெய்சி ஆடிட்டர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...