கோவை-அவினாசி சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து: தனியார் பேருந்து ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு

திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

தெக்கலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வேனின் பின்னால் வந்த மூன்று கார்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அங்கு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையில் நின்ற கார்களின் மீது மோதியது.

இதனால், கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளானவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் பேருந்தின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தெக்கலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...