செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் பலியான செய்தியாளர் ஷாலினியின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சாலை விபத்தில் பலியான செய்தியாளர் ஷாலினியின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் சென்னையிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரும், இவரது நண்பர்கள் நான்கு பேரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் வசிக்கும் சக ஊழியரை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களது கார் கொடைரோடு என்ற இடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஷாலினியின் பிறந்த நாளன்றே அவர் உயிரிழந்தது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரங்கல்

செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க., தலைவர் தமிழை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஷாலினியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...