ஆடி மாதத்து கூழ் வார்க்க தானியங்கள் வழங்குங்கள் - அர்ஜூன் சம்பத்

கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.



இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், "இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் நேன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் 6000 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அதே போல் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கும் வழங்கப்பட்ட வேண்டும்.

முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்.

கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையினை தமிழக அரசு நீக்க வேண்டும். பக்தர்கள் அவர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிப்பாட்டால் மட்டுமே ஒரு மன நிறைவு கிடைக்கும். இந்த தடையினால் அகல் விளக்கு செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பலர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...