பா.ஜ.க.,வுடன் இணைந்தால் ரஜினிக்கு சிவசேனா ஆதரவளிக்கும் : மாநிலத் தலைவர் அறிவிப்பு

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் சிவசேனா கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ரமேஷ் பாபு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுமக்களுக்குக் கந்து வட்டியை கொடுத்து தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலை பொதுமக்களுக்குப் பயன் தரும் சாலையாக இருப்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.



வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை செயல்படுத்தப்போவதாக தெரிவித்திருப்பதை சிவசேனா கட்சி ஆதரிக்கிறது. ரஜினிகாந்த் பா.ஜ.க.,வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிவசேனா கட்சியும் அதில் இணையும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...