வரும் 17-ம் தேதி கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

வரும் 17-ம் தேதி கரூர் ரயில்நிலையம் - திருச்சி பயணிகள் ரயில் முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்நிலையம் - கரூர் ரயில்நிலையம் ரயிலானது, திருச்சி ரயில்நிலையம்-முத்தரசன்நல்லூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் முத்தரசன்நல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

ஈரோடு ரயில்நிலையம் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

17-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் ரயில், திருப்பூர்- முத்தரசன்நல்லூர் இடையே 01.40 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும்.

திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலின் புறப்பாடு நேரம் 01.30 மணிநேரம் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 01.00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 02.30 மணிக்கு கிளம்புகிறது.

இதேபோல, லோகூர் - பொம்மிடி நிறுத்தம் அருகே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலப்புழா-டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - சேலம் இடையே 01.40 மணிநேரம் நிறுத்தப்படும். இதேபோல, சேலம்- காட்பாடி ரயில்நிலைம் ரயில் 01.20 மணிநேரம் சேலம்-லோகூர் இடையே நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...