திருப்பூரில் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி மனைவியின் தங்கசங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பெனி அதிபர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். 

இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

இந்த நிலையில், சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும் அந்தக் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், சுப்புலட்சுமி அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கொள்ளையர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 



இதைத்தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் அருகே இருக்கும் செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வீட்டின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 



இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...